காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. சித்சபையில் உற்சவ ஆச்சாரியாரால் ரகசிய பூஜை நடத்தப்பட்டது. பின்னர் பஞ்சமூர்த்திகள் நான்கு வீதிகளிலும் வீதியுலா வந்தது. பின்னர் பிற்பகல் 2.15 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர். அதைத்தொடர்ந்து சித்சபா பிரவேசம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். இன்றுடன் பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
The post ஆனித்திருமஞ்சன தரிசனம் appeared first on Dinakaran.