நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதியை பெற்று மோடி மீண்டும் பிரதமராவார்: ஒன்றிய அமைச்சர் நம்பிக்கை

மேட்டுப்பாளையம்: கோவை, மேட்டுப்பாளையத்தில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயில், ஓடந்துறை விநாயகர் கோயிலில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர், கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து ஒன்றிய அரசின் 9 ஆண்டு கால சாதனைகள் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் பாரத பிரதமராக நரேந்திர மோடி வருவார். ஒன்றிய அரசு கொண்டு வந்த ஜல்ஜீவன் திட்டம் நாட்டு மக்களுக்கான மகத்தான திட்டம். தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் சிக்கியுள்ளதால் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் அவரை தமிழ்நாடு முதல்வர் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதியை பெற்று மோடி மீண்டும் பிரதமராவார்: ஒன்றிய அமைச்சர் நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: