தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் மூக்குப்பீறி கூட்டுறவு நகர வங்கியில் போலி நகையை அடகு வைத்து 1.14 கோடி மோசடி நடைபெற்றுள்ளது. நண்பர்கள், உறவினர்கள் பெயரில் 400சவரன் போலி நகையை வைத்து நகை மதிப்பீட்டாளர் ராஜசேகர் மோசடி என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி காசாளர், மேலாளர், தலைவர் பிரபாகரன், நகை மதிப்பீட்டாளர் ராஜசேகரிடம் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்று வருகிறது. கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் சந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் கூட்டுறவு நகர வங்கியில் போலி நகையை அடகு வைத்து 1.14 கோடி மோசடி..!! appeared first on Dinakaran.