நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை: எம்எல்ஏ திறந்து வைத்தார்

 

திருவள்ளூர்: அணைக்கட்டுச்சேரி நடுநிலைப்பள்ளியில் இரண்டு ஸ்மார்ட் வகுப்பறைகளை எம்எல்ஏ திறந்துவைத்தார் பூந்தமல்லி ஒன்றியம், சோரஞ்சேரி ஊராட்சி, அணைக்கட்டுசேரியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 500 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிக்கு பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஸ்மார்ட் வகுப்பறை அமைத்துத்தருவதாக ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 2 ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். அதன்பேரில் 2 ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் எம்.சுகுமார் வரவேற்றார். திமுக ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ், ஒன்றிய நிர்வாகிகள் ஏ.ஜனார்த்தனன், ஏ.ஆர்.பாஸ்கர், பிரபாகரன், வி.பி.பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.

விழாவுக்கு ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, தலைமை வகித்து, மாணவர்களின் பயன்பாட்டிற்கு 2 ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார். இதில் நிர்வாகிகள் சாய் மோகன், மாறன், மனோகரன், ஸ்ரீதர், கோவிந்தராஜ், உதயசூரியன், பெருமாள், பார்த்திபன், பரனிதரண், அருண்பாண்டியன், கோட்டிஸ்வரன், குட்டி, தங்கராஜ், அகஸ்டின், முருகன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் எஸ்.பூங்கோடி நன்றி கூறினார்.

The post நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: