திண்டிவனம் அருகே முன்னாள் டிஐஜி பொன் மாணிக்கவேல் கார் விபத்து

திண்டிவனம், ஜூன் 24: திண்டிவனம் அருகே முன்னாள் டிஐஜி பொன் மாணிக்கவேல் கார் விபத்தில் சிக்கியது. சென்னையில் இருந்து திருச்சிக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் சிறப்பு அதிகாரி(டிஐஜி) பொன்.மாணிக்கவேல், காரில் சென்றார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தென்பசார் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிக் கொண்டு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற வேன் மீது பொன்.மாணிக்கவேலின் கார் உரசியது. இதில் காரின் பக்கவாட்டில் மட்டுமே சேதமடைந்த நிலையில், எந்தவித காயமும் இன்றி பொன்.மாணிக்கவேல் உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post திண்டிவனம் அருகே முன்னாள் டிஐஜி பொன் மாணிக்கவேல் கார் விபத்து appeared first on Dinakaran.

Related Stories: