ஒரு மனுஷன் எத்தனை வாட்டிதான் அடிபடுவான் பாத்ரூமிற்கு இந்த டைல்ஸ்சா? சுத்தியலால் உடைத்த தொழிலாளி

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாங்கோடு ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் சந்தை ஒன்று செயல்படுகிறது. இதை ஒட்டி ஊராட்சி சார்பில் பொது பாத்ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாத்ரூமில் தரை பகுதியில் வளவளப்பான டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. எப்போதும் தண்ணீர் புழங்கும் பகுதி என்பதால் இங்கு செல்பவர்கள் பலர் வழுக்கி கீழே விழுந்துள்ளனர். இந்நிலையில் இந்த பாத்ரூமிற்கு சென்ற கூலி தொழிலாளி ஒருவர் கால் வழுக்கி கீழே விழந்ததில் தலை, கையில் காயம் ஏற்பட்டுள்ளது. வழுக்கி விழுந்ததை நடித்து காட்டியபோது மீண்டும் விழுந்து அடிபட்டார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் சுத்தியல் கொண்டு வந்து பொது கழிப்பறை தரை பகுதியை அடித்து உடைத்து சேதப்படுத்தினார். இதை அந்த பகுதியில் நின்றவர்கள் வீடியோ பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

The post ஒரு மனுஷன் எத்தனை வாட்டிதான் அடிபடுவான் பாத்ரூமிற்கு இந்த டைல்ஸ்சா? சுத்தியலால் உடைத்த தொழிலாளி appeared first on Dinakaran.

Related Stories: