11, 12ம் வகுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் மேனிலைப் பள்ளிகளில் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் பேச்சாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு மூன்று பிரிவுகளில் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில் 11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 4ம் தேதி 9 மணியளவில் திருவள்ளூர் மணவாள நகரில் உள்ள கே.இ. நடேச செட்டியார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் மூன்று மாணவர்களை மட்டும் தேர்வு செய்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும்.

கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் ஜூலை 5ம் தேதி காலை 9 மணியளவில் திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளன.கல்லூரி மாணவர்களுக்கான போட்டிக்கு ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்த கல்லூரி முதல்வரே ஒரு போட்டிக்கு ஒருவர் என கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிக்கு 3 பேர் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். தமிழ் ஆர்வமுள்ள மாணவர்கள் மேற்கூறியுள்ள போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post 11, 12ம் வகுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: