தென்காசி மாவட்டம் கடையம் அருகே சம்பன்குளத்தில் குர்பானி கொடுப்பதற்காக மதுரை, ஈரோடு உள்ளிட்ட பகுதியில் இருந்து விலை உயர்ந்த ஆடுகளை வாங்கி வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகளை அங்குள்ள சிறுவர்கள், இளைஞர்கள் விளையாட்டாக சண்டையில் ஈடுபட வைத்துள்ளனர். சுமார் மூன்று வயது உடைய 2 ஆடுகளை மோதவிடும் வகையில் இந்த ஆட்டு சண்டை நடந்தது. அப்போது 2 ஆடுகளும் ஒன்றை ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் ஒரே முட்டில் மற்றொரு ஆடு பரிதாபமாக உயிரிழந்தது. இரண்டு ஆடுகள் மோதும் இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆட்டு சண்டை சட்டத்தை மீறி நடந்ததா என்பது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு: ஒரே டேக்கில் உயிரை விட்ட ஆடு appeared first on Dinakaran.