முடிவில் துணை செயலாளர் குமரன் நன்றி கூறினார். ரூ.80 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பாபநாசம் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.80 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றதை உதவி பொறியாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்ட அமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் 1 கி.மீ அளவில் சாலை அகலப்படுத்தி தார் சாலை மேம்பாடு செய்யும் பணி அகரமாங்குடி, அய்யம்பேட்டை இடையே நெடுஞ்சாலையில் நடைபெற்றது. இப்பணியை பாபநாசம் உதவி கோட்ட பொறியாளர் பானுதாசன், உதவி பொறியாளர் ரவி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

 

The post முடிவில் துணை செயலாளர் குமரன் நன்றி கூறினார். ரூ.80 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Related Stories: