செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

செம்பனார்கோயில், ஜூன் 18: செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் மாலை ஆனி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் தூள் மற்றும் பல்வேறு வாசன திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள், அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதனையடுத்து பெண்கள் மாவிளக்கு ஏற்றியும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: