The post உபியின் 80 தொகுதிகளிலும் பாஜ தோற்கடிக்கப்படும்: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம் appeared first on Dinakaran.
லக்னோ: பெரிய கட்சிகள் ஆதரவளித்தால் உபியில் உள்ள 80 மக்களவை தொகுதிகளிலும் பாஜ தோற்கடிக்கப்படும் என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார். 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. பாஜவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்க பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணியில் சேருமா என்பது தெரியவில்லை. இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அகிலேஷ் பேசுகையில்,‘‘ நாட்டின் பெரிய கட்சிகள் எங்களுக்கு ஆதரவளித்தால் உபியின் 80 எம்பி தொகுதிகளிலும் பாஜ வீழ்த்தப்படும். குறிப்பிட்ட மாநிலங்களில் எந்த கட்சி பலமாக இருக்கிறதோ அந்த கட்சி தான் தொகுதி ஒதுக்கீட்டை முடிவு செய்ய வேண்டும். பிற்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் ஒன்று சேர்ந்தால் அடுத்த தேர்தலில் பாஜ கூட்டணியை வீழ்த்தலாம்’’ என்றார்.
The post உபியின் 80 தொகுதிகளிலும் பாஜ தோற்கடிக்கப்படும்: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம் appeared first on Dinakaran.