ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி நடந்த பயங்கர ரயில் விபத்தில் 291 பேர் பலியாயினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஒடிசாவின் ராய கட்டா மாவட்டம் அம்படோலாவில் நேற்று சரக்கு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் உயிர் சேதமோ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. சிறப்பு வழித்தடத்தில் விபத்து நிகழ்ந்ததால் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது appeared first on Dinakaran.

Related Stories: