தற்போது மீண்டும் என்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததால், நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த அமுதசுரபி ஊழியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் அமுதசுரபி நிறுவனம், பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று, வாங்கிய கடனுக்கு பல மாதங்கள் வட்டியும் கட்டாததால், தற்போது அமுதசுரபியின் இடத்தை வங்கி கையகப்படுத்தி உள்ளது. கடன் வழங்கிய இந்தியன் வங்கி நிர்வாகம் வட்டியுடன் சேர்த்து ரூ.4.94 கோடி கட்ட வேண்டி கடந்த மார்ச் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. 60 நாட்களாகியும், தொகையை செலுத்தாததால், அடமானம் வைத்த வெங்கட்டா நகரிலுள்ள 3870 சதுர அடி நிலம் மற்றும் அதில் உள்ள குடோனை வங்கி நிர்வாகம் கையகப்படுத்தி உள்ளது.
The post ரூ.4.9 கோடி கடனை திருப்பி செலுத்தாததால் புதுவை அமுதசுரபி கட்டிடத்தை வங்கி நிர்வாகம் கைப்பற்றியது appeared first on Dinakaran.
