ஆர்.கே. பேட்டை அருகே ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி: எம்.ஏல்.ஏ தொடங்கி வைத்தார்

 

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே 45 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணியை எஸ்.சந்திரன் எம்ஏல்ஏ தொடங்கி வைத்தார். ஆர்.கே.பேட்டை ஒன்றியம் மீசரகாண்டபுரம் ஊராட்சியில் முதலமைச்சர் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணியை, திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.சந்திரன் எம்எல்ஏ நேற்று தொடங்கி வைத்தார். ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, ஒன்றியக்குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் திலகவதி ரமேஷ், திமுக ஒன்றிய செயலாளர்கள் பழனி, சண்முகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆர்.கே. பேட்டை அருகே ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி: எம்.ஏல்.ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: