நேற்றுமுன்தினம் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்திற்கு பின்புறம் உள்ள வனப்பகுதியில் 20 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று இரவு இந்த காட்டு யானைகள் யானைமடுவு பகுதியில் முகாமிட்டன. இதுபற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து, யானைகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருதமலை அடிவார பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
The post கோவை மருதமலை அடிவாரத்தில் உலாவரும் 20 காட்டு யானைகள்: வனத்துறை தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.