எனவே, அனைவரும் வீட்டு உடைகளான லுங்கி, நைட்டி அணிந்து சுற்றித் திரிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார். இது சமுதாயம் எடுத்த நல்ல முடிவு, இதை அனைவரும் மதிக்க வேண்டும், எதிர்க்க ஒன்றுமில்லை. பெண்கள் நைட்டி அணிந்து திரிந்தால் அது ஆண்களுக்கு அசௌகரியமாக இருக்கும், ஆண்கள் லுங்கி அணிந்தால் பெண்களுக்கும் அசௌகரியமாக இருக்கும். உங்கள் குழந்தைகளும் உங்களிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள்.
நைட்டியும் லுங்கியும் வீட்டில் அணியுங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வெளியே அணியக் கூடாது என்று அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று ஹிம்சாகர் அடுக்குமாடி குடியிருப்பின் செயலாளர் ஹரிபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு சமூக வளாகத்தில் ஒட்டப்பட்டதை அடுத்து, சில குடியிருப்பாளர்கள் எதிர்ப்புத் தொடங்கியுள்ளனர். வீட்டிற்குள் அணியும் ஆடைகளை பொது இடங்களில் அணியக்கூடாது என வாதிட்டனர். மறுபுறம், சிலர் சொந்த விருப்பப்படி ஆடை அணிவது தனிநபரின் அடிப்படை உரிமை என்று கூறுகிறார்கள். இந்நிலையில் குடியிருப்போர் எந்த உடையை அணிய வேண்டும் என்று உத்தரவிட குடியிருப்போர் நலச்சங்கம் யார் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
The post லுங்கி, நைட்டி அணிவதற்கு தடை: உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டா குடியிருப்போர் சங்கம் விதித்த ஆடைகட்டுப்பட்டால் சர்ச்சை appeared first on Dinakaran.