இதையடுத்து புதுச்சேரியில் மத்திய தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் குமார் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. முத்தரப்பு பேச்சில் உடன்பாடு எட்டப்படாததால் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் உறுதியாகி இருக்கிறது. வரும் 15-ம் தேதி வேலை நிறுத்தத்தை தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். வேலை நிறுத்த போராட்டம் உறுதியானால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மின் விநியோக தட்டுப்பாடு அபாயம் உருவாகும்.
The post என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி: புதுவையில் முத்தரப்பு பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை appeared first on Dinakaran.