இதனிடையே பூஷணை கைது செய்யக் கோரி போராடிய போது, மே 28ம் தேதி டெல்லியில் வீராங்கனைகள் கைது செய்யப்பட்டது பதக்கத்தை ஆற்றில் வீச முயன்ற சம்பவங்களால் சர்வதேச மல்யுத்த சம்மேளனம் அதிர்ச்சி அடைந்தது. அடுத்த 45 நாட்களுக்குள் தேர்தலை நடத்தவில்லை என்றால் அங்கீகாரத்தை ரத்து செய்யப்போவதாக எச்சரித்தது. இதையடுத்து ஜூலை 4ல் தேர்தல் நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பிரிஜ் பூஷண் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
The post இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கு ஜூலை 4ம் தேதி தேர்தல்… பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷண் போட்டியிட மாட்டார்!! appeared first on Dinakaran.
