மதுபாரில் இறைச்சி கடைக்காரரை சரமாரி தாக்கி கொலை மிரட்டல்

 

பாகூர், ஜூன் 11: பாகூர் அருகே மதுபாரில் இறைச்சி கடைக்காரரை சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி கன்னியகோவில் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் காசிநாதன் (65), இவர் அங்குள்ள கோயிலில் பூசாரியாக இருந்து வருகிறார். இவரது மகன் தேவா (எ) தேவநாதன் (30), இவர் கன்னியகோவில் அருகே கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தேவா, மது அருந்துவதற்காக கன்னியகோவிலில் உள்ள ஒரு பாருக்கு சென்றுள்ளார். அங்கு மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சப்ளையரை, கடலூர் குண்டு உப்பல
வாடியை சேர்ந்த இனியா மற்றும் அவருடைய கூட்டாளிகள் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர்.

அங்கிருந்த தேவா அவர்களை விலக்கி விட்டுள்ளார். ஆத்திரமடைந்த அவர்கள், தேவாவை தரக்குறைவாக திட்டி அங்கிருந்த தடி, இரும்பு பைப்பால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர். காயமடைந்த தேவா, கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து இனியா மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

The post மதுபாரில் இறைச்சி கடைக்காரரை சரமாரி தாக்கி கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: