கன மழையால் பயிர்கள் சேதம் விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்: டிடிவி.தினகரன் கோரிக்கை

சென்னை: கன மழையால் பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் டிவிட்டரில் நேற்று பதிவிட்டிருப்பதாவது: கடலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் வாழை, சோளம், முருங்கை, தென்னை, பப்பாளி மற்றும் பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதில் இருந்து தற்போதுதான் மீண்டு வந்து மீண்டும் கடன் வாங்கி கோடைகால பயிர் செய்த நிலையில் சூறாவளி காற்றில் அவையும் சேதம் அடைந்ததால் பெரும் வேதனையில் தவிக்கின்றனர். எனவே, தமிழ்நாடு முழுவதும் வேளாண்துறை அதிகாரிகள் சேத விவரங்களை மதிப்பீடு செய்து பாதிப்புகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்யும் வரை காத்திருக்காமல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.

The post கன மழையால் பயிர்கள் சேதம் விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்: டிடிவி.தினகரன் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: