இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு இன்னும் பதில்மனு தாக்கல் செய்யவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ஜூன் 30ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார். இதை ஏற்று பதில்மனு தாக்கல் செய்ய வரும் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதிகள், ஜூலை 3ம் தேதி வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
The post ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்கு வரும் 30ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.