தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!!

சென்னை: தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அதிமுக எம்.எல்.ஏ.வான சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. சி.விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் எம்.பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையைவிட அதிகமாக செலவு செய்துள்ளார் சி.விஜயபாஸ்கர் என மனுதாரர் தெரிவித்திருந்தார். வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என சி.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்திருந்தார். சி.விஜயபாஸ்கர் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், தேர்தல் வழக்கு விசாரணை தொடரும் என தெரிவித்துள்ளனர்.

The post தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Related Stories: