டெல்லி: ராஜஸ்தான் முன்னாள் துணைமுதல்வர் சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியான செய்திக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக பரவும் தகவல் வதந்தி என்று பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் எதிர்கொள்ளும் என்றும் அவர் கூறினார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே அண்மையில் கருத்து மோதல் நிலவியது.
The post ராஜஸ்தான் முன்னாள் துணைமுதல்வர் சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியான செய்திக்கு காங். மறுப்பு..!! appeared first on Dinakaran.