வாலிபருக்கு கத்திக்குத்து: 2 பேர் கைது

 

கோவை, ஜூன் 9: கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (24). பிளம்பர். இவர், தனது வீட்டில் இருந்தபோது மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா (24) பிரித்விராஜ் (22), சுஜித் (24), அபி விஷ்ணு (24) ஆகியோர் சென்றனர். அவர்கள் வீட்டிற்குள் புகுந்து கார்த்திகேயனை மிரட்டி தாக்கினர். கத்தியால் தோள்பட்டையில் குத்தினர்.

இதில் காயமடைந்த இவர், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யா மற்றும் அபி விஷ்ணு ஆகியோரை கைது செய்தனர். மற்ற இரண்டு பேரையும் தேடி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக இவர்கள் கத்தியால் குத்தியதாக தெரிகிறது. கைதான 2 பேர் மீதும், தப்பிய 2 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

The post வாலிபருக்கு கத்திக்குத்து: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: