இந்நிலையில், உலக அழகிப் போட்டி நடத்தும் அமைப்பின் தலைவரும் சிஇஓ.வுமான ஜூலியா மோர்லே, “உலக அழகிப் போட்டியின் 71வது போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவில் பல்வேறுபட்ட கலாசாரம், உலகளவிலான புகழ்பெற்ற தலங்களை பற்றி சொல்ல தேவையில்லை. வியத்தகு இந்தியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் ஏறக்குறைய ஒருமாதம் தங்கியிருந்து இந்த போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்,” என்று தெரிவித்தார். தற்போதைய உலக அழகியான போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா, இந்தியாவில் இதற்கான பரப்புரை மேற்கொண்டுள்ளார்.
The post 27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் நவம்பரில் உலக அழகிப் போட்டி: 130 நாடுகளின் அழகிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.