நார் ஏற்றுமதியில் புரட்சி: இந்தியாவை நம்பி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள்.! ஏற்றுமதி மேலும் அதிகரிக்க வாய்ப்பு

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தென்னை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இங்குள்ள விவசாயிகள் தென்னை சாகுபடியில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளான ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை, கோட்டூர், ஆழியார், கோமங்கலம், கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 50 லட்சத்துக்கு மேல் தென்னை மரங்கள் உள்ளன. தென்னையில் உள்ள தேங்காய் மட்டையிலிருந்து பிரித்து எடுக்கப்படும் நார் மற்றும் நார்க்கழிவு உற்பத்தி அதிகளவில் காணப்படுகிறது. தேங்காய் மட்டையிலிருந்து நாரை பிரித்தெடுக்க பொள்ளாச்சி,ஆனைமலை,கிணத்துக்கடவு தாலுகா சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் நார் மற்றும் நார்க்கழிவுகள் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி மாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நார் உற்பத்தியில் தற்போது தமிழகத்தில் பொள்ளாச்சி சிறந்து விளங்குகிறது. பொள்ளாச்சியில் உற்பத்தியாகும் தென்னை நார்களுக்கு வெளிநாடுகளில் அதிக கிராக்கி உள்ளது.ஆஸ்திரேலியா, பிரான்ஸ்,கொரியா,இங்கிலாந்து சீனா,துபாய்,அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு நார் அதிகளவில் ஏற்றுமதியாகிறது.பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதில் அமெரிக்க,சீனா உள்ளிட்ட நாடுகளிலே தென்னை நார் கழிவு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மட்டையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வெள்ளை மற்றும் பிரவுன் கலரில் இரண்டு தரத்துடன் கூடிய நார் உற்பத்திக்கு பிறகு, தீ வைத்து எரிக்க ஒதுக்கி வைக்கப்படும் நார்க்கழிவு துகளின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. விவசாய பணிகளுக்கு நார் கழிவுகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.மேலும் காய்கறி விளைச்சல் அதிகரிக்க செய்யவும் நார்க்கழிவு பயன்படுத்தப்படுகிறது. இவை கட்டிகளாக வடிவமைத்து அனுப்பபடுகிறது. அதிலும், கொரோனா ஊராடங்குக்கு பிறகு நடப்பாண்டில் கடந்த 6 மாதத்தில் நார் ஏற்றுமதி வழக்கத்தை விட அதிக அளவில் ஏற்றுமதியாகி உள்ளது. இது இந்திய தொழிற்புரட்சியில் சாதனையாக உள்ளது. தென்னை நார் மற்றும் நார்க்கழிவு துகளினை ஏற்றுமதி செய்வதற்காக பொள்ளாச்சியில் சுமார் 10ஆண்டுக்கு முன்பே அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று கால் பதித்தது. பல ஆண்டுக்குப் பிறகு தற்போது, சில வெளிநாட்டு நிறுவனங்களும் நார் தொழிலில் முதலீடு செய்து கால்பதிக்க, ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.வெளிநாட்டு நிறுவனம் பொள்ளாச்சியில் கால் பதிப்பதால், இங்கு உற்பத்தியாகும் நார் மற்றும் நார் கழிவுகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டில், 6 மாதங்களாக தொடர்ந்து வெயிலின் தாக்கத்தால், நாரை தரம் பிரித்து உலர வைக்கும் பணி தொடர்ந்திருந்தது. கயிறு வாரிய தலைவர் டி.குப்புராமு கூறுகையில்: கயிறு வாரியம் நிறுவப்படுவதற்கு முன்பு தென்னை நார் தொழிலின் மூலம் தென்னை நார் மற்றும் வீட்டு அலங்கார பொருட்கள் மட்டுமே கிடைத்து கொண்டு இருந்தது. கயிறு வாரியத்தின் தொடக்கத்திற்குப் பிறகு, கயிறு வாரியத்தின் ஆராய்ச்சி மையங்கள் மூலம் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட பல்வேறு கயிறு தயாரிப்புகள் உருவாக்கப்பட்டன. கயிறு வாரியத்தால் உருவாக்கப்பட்ட புதிய தயாரிப்புகள் இயற்கையை எவ்வாறு காப்பாற்றுகிறது மற்றும் பசுமையான எதிர்காலத்தை மேம்படுத்துகிறது. நீடித்த விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதில் தென்னை நார்க்கழிவு முக்கிய பங்கு வகிக்கிறது. வளர் ஊடகமாக, தென்னை நார்கழிவு சிறந்த ஈரப்பதத்தைத் தக்க வைத்தல் மற்றும் காற்றோட்ட பண்புகளை வழங்குகிறது. ஆரோக்கியமான தாவர வளர்ச்சியை ஆதரிக்கிறது.மற்ற முறைகளுடன் ஒப்பிடும்போது தென்னை நார்க்கழிவு பயன்படுத்தி பயிரிடுவதற்கு குறைவான பூச்சிக் கொல்லிகள் மற்றும் உரங்கள் தேவைப்படுகின்றன, இது குறைந்த சுற்றுச்சூழல் மாசுப்பாட்டுக்கு வழிவகுக்கும்.

மண்ணில் அதன் அமைப்பு, ஈரப்பதம் தக்க வைத்தல் மற்றும் ஊட்டச்சத்தை தக்க வைக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்த தென்னை நார் கழிவை கரிம திருத்தமாக சேர்க்கலாம். இது தாவரங்களில் சிறந்த காற்றோட்டம் மற்றும் வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.தென்னை நார் பித் ஆனது கரி பாசிக்கு(PEAT MOSS) ஒரு நிலையான மாற்றாகவும் செயல்படுகிறது, இது பெரும்பாலும் பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்புகளிலிருந்து அறுவடை செய்யப்படுகிறது. இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் பொள்ளாச்சியில் உற்பத்தியாகும் தென்னை நார் மற்றும் நார் கழிவு ஏற்றுமதி நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. தென்னை நார் புரட்சியில் பொள்ளாச்சி சிறந்து விளங்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது” என்றார். தென்னை நாரின் ஆதாரமான தென்னை மரங்கள்,புதுப்பிக்கத்தக்கவை, மற்றும் வெப்பமண்டல பகுதிகளில் அதிக அளவில் ஏராளமாக உள்ளன. இந்த மரங்களுக்கு குறைந்தபட்ச வளங்கள் தேவை மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளில் செழித்து வளர்கின்றன.தென்னை நார்களைப் பயன்படுத்துவதன் மூலம், நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க வளத்தை நாம் பயன்படுத்துகிறோம்.வரையறுக்கப்பட்ட வளங்களை குறைக்கும் மற்றும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளின் தேவையை குறைக்கிறோம். தென்னை நார்களைப் பிரித்தெடுப்பதில் மிக குறைந்தபட்ச இரசாயன சிகிச்சைகள் மட்டுமே அடங்கும், காற்று மற்றும் நீர் ஆதாரங்களுக்கு ஏற்படும் மாசு அபாயங்களைக் குறைக்கிறது.

கூடுதலாக, தென்னை நார் பெரும்பாலும் உள்நாட்டிலேயே பெறப்படுகிறது, போக்குவரத்து தொடர்பான உமிழ்வைக் குறைக்கிறது மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இயற்கை அன்னையை பாதுகாக்கும் தென்னை இயற்கையை காப்பாற்றவும் பாதுகாக்கவும் நாம் எடுக்கும் முயற்சிகளில் தென்னை நார் ஒரு இயற்கை சாம்பியனாக உள்ளது.பேக்கேஜிங் பொருட்கள் முதல் மண் அரிப்பு கட்டுப்பாடு,தோட்டக்கலை, மண் மேம்பாடு மற்றும் வீடு மற்றும் தோட்ட பொருட்கள் வரை, தென்னை நார் பல்துறை மற்றும் நிலைத்தன்மையை வழங்குகிறது. பசுமையான எதிர்காலத்திற்கு பங்களிக்கும் பலவிதமான நன்மைகளை தென்னை நார் வழங்குகிறது. பல்வேறு தொழில்கள் மற்றும் பயன்பாடுகளில் தென்னை நாரைத் தழுவி, கழிவுகளைக் குறைத்து, மண் அரிப்பைத் தடுத்து, நிலையான விவசாயத்தை மேம்படுத்துகிறோம். தென்னை நார் மற்றும் நமது சுற்றுச்சூழல் அமைப்புகளின் சமநிலையை பாதுகாக்கும் மற்றும் மீட்டெடுக்கும் திறனையும் நாம் அங்கீகரிப்போம். அனைவரும் சேர்ந்து இந்த இயற்கைப் பொக்கிஷத்தின் திறனைப் பயன்படுத்தி, எதிர்கால தலைமுறைகளுக்கு பிரகாசமான மற்றும் நிலையான உலகத்தை உறுதி செய்ய முடியும்.

The post நார் ஏற்றுமதியில் புரட்சி: இந்தியாவை நம்பி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள்.! ஏற்றுமதி மேலும் அதிகரிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: