தொண்டாமுத்தூர், ஜூன் 8: கோவை புறநகர் பகுதியில் உள்ள மலையடிவார கிராமங்களில் குட்டிகளுடன் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை தின்றும்,கால்களால் மிதித்தும் நாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கெம்பனூர் பகுதியில் புகுந்த முகாமிட்ட ஒற்றை காட்டு யானை விவசாயி கதிரவன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து அங்குள்ள பண்ணை வீட்டு முன் சுமார் ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் காட்டு யானையை வனத்துக்குள் விரட்டி அடித்தனர்.
The post கோவை அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை appeared first on Dinakaran.