இந்நிலையில் மக்களவை செயலகம் ராகுல் காந்தியை எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை மத்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
இந்த தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. நேற்று கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்பட்டது. இதில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
வரும் நாட்களில் மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் பரிசோதனை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து வயநாடு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று கருதப்படுகிறது. இம்முறை இந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா என்ற பரபரப்பும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.
The post தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுலின் வயநாடு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல்?: மாதிரி வாக்குப்பதிவு நடந்தது appeared first on Dinakaran.