வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவினில் போலி பதிவெண் மூலம் பால் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு

வேலூர் : வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவினில் போலி பதிவெண் மூலம் பால் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒரே பதிவெண் கொண்ட 2 வாகனங்களைப் பயன்படுத்தி பால் திருட்டில் ஈடுபட்டது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். வாகன உரிமையாளர் சிவகுமார், ஓட்டுநர் விக்கி மீது 2 பிரிவுகளின் கீழ் சத்துவாச்சாரி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. ஆவின் உதவி மேலாளர் சிவக்குமார் அளித்த புகாரில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவினில் போலி பதிவெண் மூலம் பால் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: