வாழை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும்படி ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கடலூர் மாவட்டத்தில் திடீர் சூறைக்காற்றால் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1000 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் வாழை மரங்கள் சாய்ந்துள்ளன. சேதமடைந்த வாழைப்பயிர்களை அதிகாரிகள் குழுவை அனுப்பி கணக்கீடு செய்து, ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் சூறாவளி காற்றால் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன. தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கையில் சூறாவளி காற்றுடன்பெய்த மழையில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கும், வாழைகளுக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

The post வாழை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: