மதுபாட்டில் மீது விஷ்ணுபிரியா படம் அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி விஷ்ணு பிரியா, தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு வேதனைஅடைந்தேன். மதுபாட்டில்களில் மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற வாசகத்தின் கீழ், தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி விஷ்ணு பிரியாவின் புகைப்படத்தை ஒட்டி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு சிறுமியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அந்த புகைப்படத்தை பார்த்தாவது ஒவ்வொரு தந்தையும் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

The post மதுபாட்டில் மீது விஷ்ணுபிரியா படம் அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: