கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து உபரி நீர் திறப்பு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து உபரி நீர் திறப்பால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கேஆர்பி அணைக்கு நீர்வரத்து உயர்த்தப்பட்டுள்ளது. 52 அடி உயரம் கொண்ட கேஆர்பி அணை நீர்வரத்து 400 கன அடியாக உயர்ந்ததால் 51 அடியை எட்டியது.

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுழைந்து தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் வழியாக வங்கக்கடலில் இணைகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் அருகே கே ஆர் பி அணை கட்டப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து பெய்த மழையால் கே ஆர் பி எனை அதன் மூலம் கொள்ளளவான 52 அடியை எட்டியிருந்தது. கடந்தாண்டு அணை அதன் முழு கொள்ளளவை கோடை காலத்தில் எட்டியது அதனால் ஆண்டு முழுவதும் உபரி நீர் ஆற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் 52 அடி உயரம் கொண்ட கேஆர்பி அணை நீர்வரத்து 400 கன அடியாக உயர்ந்ததால் 51 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அணையை சுற்றியுள்ள 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து உபரி நீர் திறப்பு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: