சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது

 

வேப்பூர், ஜூன் 5: விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 17 வயது சிறுமி. இருவரும் ஒரே வகுப்பில் படித்து வந்தனர். இந்நிலையில் 17 வயது சிறுவன், சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து பெற்றோருக்கு தெரிந்தால் பிரச்னை ஏற்படும் என யாருக்கும் தெரியாமல் கருவை கலைக்க நாட்டு வைத்தியம் மூலம் முயன்றார். அப்போது சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது.

இதையடுத்து பெற்றோர் சிறுமியை சிதம்பரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது, சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது. சிறுமி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறினார். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: