ரூ.2.10 லட்சம் பறிகொடுத்த முதியவர்

 

கோவை, ஜூன் 5: கோவை ஆர்.எஸ்.புரம் டி.வி சாமி ரோட்டை சேர்ந்தவர் சுப்பையா (65). சில ஆண்டுகளாக டி.வி. சாமி ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். 4 ஆண்டுகளாக சம்பளமாக வாங்கிய 2.10 லட்ச ரூபாயை தனது பேக்கில் வைத்திருந்தார். இந்நிலையில், இவர் தங்கியிருந்த அறைக்குள் புகுந்த மர்ம நபர் நைசாக அவர் பேக்கில் வைத்திருந்த 2.10 லட்ச ரூபாயை திருடி சென்றுவிட்டார். அதிர்ச்சியடைந்த சுப்பையா ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

The post ரூ.2.10 லட்சம் பறிகொடுத்த முதியவர் appeared first on Dinakaran.

Related Stories: