பின்னர் ஸ்ரீ கற்பக விநாயகருக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மஹா கும்பாபிஷேக விழாவில் கே.பி.கே. செல்வராஜ், பேரூராட்சித் தலைவர் ஏ.ஜி. ரவிச்சந்திரன், திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ், மகாஜன சங்க நகரத் தலைவர் சுப்பிரமணி, சரவணன் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கோயில் நிர்வாகக்குழு தலைவர் ஏ.வி.நேதாஜி தலைமையில் விழாக் குழுவினர் மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. காவல் ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
The post பொதட்டூர்பேட்டையில் கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா: 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.