திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை: ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் 75 ஆயிரத்து 871 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 32,859 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.27 கோடியை காணிக்கையாக செலுத்தினர். பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

The post திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: