மைசூரு மாவட்ட லோக்ஆயுக்தா போலீசார் 4 அரசு அதிகாரிகள் வீடுகளில் நடத்திய சோதனையில் கட்டு கட்டாக பணம், நிலம் வாங்கி குவித்துள்ளதற்கான பட்டாக்கள், விலையுர்ந்த கார் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்தனர். பெங்களூரு கோடிகெஹள்ளி கிராம பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி ரங்கசாமி வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.7 கோடி மதிப்பிலான வீடு, ரொக்கப்பணம், கிலோ கணக்கில் தங்க, வைர, வெள்ளி ஆபரணங்கள், 7 கார்கள், பல கோடி மதிப்பிலான நிலம் உள்ளதற்கான பட்டாக்கள், வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள், சொகுசு வீடுகள் என பல கோடி சொத்து சேர்த்திருப்பதை பார்த்து லோக்ஆயுக்தா போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
The post கர்நாடகாவில் வருமானத்திற்கு அதிகம் சொத்து குவிப்பு அரசு அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு: கட்டுக்கட்டாக பணம், நகைகள் பறிமுதல் appeared first on Dinakaran.