புதுக்கோட்டை மாவட்டம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி 40 வயதான நபர் உயிரிழந்துள்ளார். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டி, எருதுவிடும் விழா ஆகியவை நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 6 மாதங்களுக்குள் நடைபெறும் என்பது வழக்கம். இன்றுடன் நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு முடிவடைந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உசிலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கீழவேகுப்பட்டியில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அப்பகுதியில் ஆங்காங்கே காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

இதில் 40 வயதுடைய பெயிண்டர் வேலை பார்க்கும் சிங்கார ராவணன் என்பவரை காளை முட்டியது. இதனால் காயமடைந்த அவர் வலியால் துடித்துள்ளார். இதையடுத்து அங்குள்ள மருத்துவ குழுவினர் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளார். இதையடுத்து பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு சிங்கார ராவணன் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

The post புதுக்கோட்டை மாவட்டம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: