மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயரிடம் 52 மனுக்கள் குவிந்தன

 

கோவை, மே 31: கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகராட்சி கமிஷனர் மு. பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை கமிஷனர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மேயரிடம் அளித்தனர்.

இவற்றில் கிழக்கு மண்டலத்தில் 10 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 4 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 10 மனுக்களும், தெற்கு மண்டலத்தில் 7 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 12 மனுக்களும், பிரதான அலுவலகத்தில் 9 மனுக்களும் என மொத்தம் 52 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இக்கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா இம்மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். இக்கூட்டத்தில் மண்டல உதவி கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், நகரமைப்பு அலுவலர், மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

The post மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயரிடம் 52 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.

Related Stories: