திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ஆரணி பேரூர் திமுக சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் நேற்று நடந்தது. ஆரணி பேரூர் செயலாளர் முத்து தலைமை தாங்கினார். முன்னதாக இளைஞரணி அமைப்பாளர் பார்த்திபன் வரவேற்றார். சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், துணைச்செயலாளர் கலையரசி, பொருளாளர் கரிகாலன், ஆனந்தகுமார், பொன்னரசி, சுபாஷினி ரவி, கவுசல்யா, அருணா, மாணவரணி விமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தலைமை பேச்சாளர் மதுரை சேவியர் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் பகலவன், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் இளைஞரணி துணை அமைப்பாளர் தமிழ்செல்வம், ஈஸ்வரய்யா, ரோகிந் நன்றி கூறினர். இதேபோல், சின்னம்பேடு கிராமத்தில் திமுக அரசின் 2 ஆண்டு கால சாதனைகள் விளக்க தெருமுனைக்கூட்டம் இளைஞரணி சார்பில் நடந்தது. ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பகலன், ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் செங்கை தாமஸ் சிறப்புரையாற்றினார்.

The post திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: