மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சத்யேந்தர் ஒரு துணிச்சலான ஹீரோ: கெஜ்ரிவால் டுவிட்

புதுடெல்லி: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாஜி அமைச்சர் சத்யேந்தரை ஒரு துணிச்சலான ஹீரோ என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சமீபத்தில் உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. உடல் நலக்குறைவு காரணமாக சிறையின் கழிப்பறையில் மயங்கி விழுந்த சம்பவத்தால், அவருக்கு 6 வார ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது அவர் எல்என்ஜேபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ெடல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பான புகைப்படத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘துணிச்சலான ஒரு ஹீரோவை சந்தித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் சத்யேந்தர் ஜெயினுக்கு தலையில் கட்டு போடப்பட்டு உள்ளது. கை உடைந்துள்ளதால், கையிலும் கட்டு போடப்பட்டுள்ளது.

The post மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சத்யேந்தர் ஒரு துணிச்சலான ஹீரோ: கெஜ்ரிவால் டுவிட் appeared first on Dinakaran.

Related Stories: