திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று 78,818 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 39,076 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.66 கோடியை காணிக்கையாக செலுத்தினர்.

இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 23 அறைகள் நிரம்பியுள்ளது. பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: