டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் 8வது நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் தொடங்கியது. டெல்லி பிரகதி மைதானத்தில் விக்சித் பாரத் என்று தலைப்பில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. 2047ம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. நிதி ஆயோக் கூட்டத்தில் பொருளாதாரம், விவசாயம், சுகாதாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
The post டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் 8வது நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.
