மீட்கப்பட்ட 2 கிலோ நகை உரியவர்களிடம் ஒப்படைப்பு

கோவை, மே 27: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டிஜிபி சைலேந்திரபாபு, கோவை நகரில் நகை பறிப்பு, திருட்டு, கொள்ளை வழக்குகளில் மீட்கப்பட்ட நகைகளை உரிமையாளர்களிடம் வழங்கினார்.அதன்படி, 2 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் 14 பேர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், 134 செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடமும், ரூ.3 லட்சம் ரொக்கம் ஒருவரிடமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய பெண் போலீசார் உள்பட 81 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

The post மீட்கப்பட்ட 2 கிலோ நகை உரியவர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: