தற்போது தயாரிக்கக்கூடிய வந்தே பாரத் ரயில் பெட்டிகள் 180 கி,மீ வேகத்தில் செல்லகூடியவை. இதை 200 கி,மீ வேகத்தில் இயக்குவது தொடர்பாக ரயில்வே வாரியம் முடிவு செய்யும், ரஷ்யா உக்ரைன் போரால் உக்ரைனிலிருந்து வந்தே பாரத் ரயில்களுக்கு தேவையான சக்கரங்கள், எலக்ட்ரிக் உபகரணங்கள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி வேகம் சற்று குறைந்துள்ளது. மேலும், 200 படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வே வாரியம் ஆர்டர் செய்துள்ளது. இதில் 80 ரயில்கள் ஐசிஎப் தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்படவுள்ளது. வந்தே பாரத் ரயில் பெட்டிகள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்து இருக்கும். பயணிகளுக்கு விபத்து குறித்து உடனுக்குடன் தகவல்கள் அலாரம், பிற ரயிலுடன் மோதாமல் இருக்க அலாரம் உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது. இவ்வாறு ஐசிஎப் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
The post படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் மார்ச் மாதம் அறிமுகம்: ஐசிஎப் பொது மேலாளர் பிஜி மல்லையா தகவல் appeared first on Dinakaran.