சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த எஸ்.வி.கங்காபூர்வாலா நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பணியாற்றி வந்த நிலையில், மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.வி.கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் முன்னதாக பரிந்துரை செய்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த மே 24ம் தேதி, 8 மாதங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி.ராஜா பணி ஒய்வு பெற்றார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்த எஸ்.வி.கங்காபூர்வாலாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

The post சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த எஸ்.வி.கங்காபூர்வாலா நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: