இந்த மனு நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, நரசிம்மன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ நிலையை சுட்டிக் காட்டி சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமீன் வழங்குமாறு அவரது தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், ஜூலை 11 வரை 6 வாரங்களுக்கு சத்யேந்திர ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினர். ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது, டெல்லியை விட்டு வெளியே செல்லக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விரும்பும் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை பெற்று கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜாமீன் காலத்தில் சத்யேந்திர ஜெயினுக்கு வழங்கப்படும் சிகிச்சை விவரங்கள் அனைத்தையும் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் appeared first on Dinakaran.
