ஆருத்ரா கோல்டு டிரேடிங், ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவன மோசடி வழக்குகளில் ரூ.9.82 கோடி பறிமுதல்: பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி பேட்டி

சென்னை: ஆருத்ரா கோல்டு டிரேடிங், ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவன மோசடி வழக்குகள் தொடர்பாக ஐ.ஜி. ஆசியம்மாள் விளக்கம் அளித்து வருகிறார். மோசடி தொடர்பாக 5 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.9.82 கோடி ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹிஜாவு பண மோசடி வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் இதுவரை 61 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் மேலும் 8பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி கூறியுள்ளார்.

The post ஆருத்ரா கோல்டு டிரேடிங், ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவன மோசடி வழக்குகளில் ரூ.9.82 கோடி பறிமுதல்: பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: