குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்றவனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்

நீலகிரி: குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்றவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கொள்ளையர்கள் கத்தியால் வெட்டியதை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மணி என்பவர் காயம் அடைந்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற, கொள்ளையன் மணி போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். கொள்ளையர்கள் கத்தியால் வெட்டியதால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அப்போது காயம் அடைந்த மணி சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் தப்பியோடிய மற்றொரு கொள்ளையனைபோலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.மதுபான திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது கத்தியால் தாக்கியதால் இருவரில் ஒருவரை தொடைக்கு கீழ் சுட்டு பிடித்துள்ளனர்.

The post குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்றவனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: