நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது

கோவை, மே 26: கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் ஜெய கவுரி (44). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் வெள்ளலூர் என்ஜிஆர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் ஜெய கவுரி கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறிக்க முயன்றார். ஜெய கவுரி சுதாரித்து நகையை பறிக்கவிடாமல் தடுத்தார். மேலும் அந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மடக்கி பிடித்து போத்தனூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் அருண்குமார் (25) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

The post நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: